Wednesday 26 November 2014

பிரபாகரன் வருகைப் பத்து

***பிரபாகரன் வருகைப் பத்து***
________________________________________________
வானோங்கு தமிழினம்
வளர்ந்தோங்கச் செய்தவனே
தேனோங்கு செந்தமிழால்
தினமுன்னைப் பாடுகிறோம்
மானோங்கு தமிழர்க்கு
மருள்நீக்கும் மன்னவனே
வானோங்கு செங்கதிரே
வருவாய் இதுசமயம். .

கையில் தமிழேந்திக்
கருத்தில் உனையேந்தி
மெய்யாக வழிநடப்போம்
மேலான எம்தலைவா
பொய்யான கதைகளும்
புனையான வார்த்தைகளும்
நைந்ததென நீஎழுந்து
வருவாய் இதுசமயம். .

வஞ்சகத்தின் வலையதனில்
வகையாக மானானோம்
குஞ்சரி மணவாளா
குணமுள்ள மாதவனே
வஞ்சகத்தின் தளையறுத்து
வண்டமிழர் குலம்காக்க
வஞ்சலென வந்திடுவாய்
ஆறுதலைத் தந்திடுவாய். .

அஞ்சித்தலை குனிந்தும் அடிமைபோல் வாய்புதைந்தும்
அஞ்சலென வந்தவர்க்கு
ஆதரவு சொல்லிடவே
நெஞ்சம்
நிறைந்திருக்கும்
நீதிமனுச் சோழனே
கொஞ்சம் விரைந்திங்கே
வருவாய் இதுசமயம். .

மெய்யிருக்கும் இவ்வுயிரும்
ஏங்குதய்யா உனைக்காண
பொய்யிருக்கும் இவ்வுலகம்
பேசுதய்யா புனைக்கதைகள்
ஐயா பிள்ளைவேலு
பெற்றெடுத்த ரத்தினமே
செய்யதமிழ்க் கொண்டுவாரும்
பொய்யதனைப் பொடியாக்க. .

கூறாமற் குறைதீர்க்கும்
குறிப்பறிந்த மன்னவனே
தேறாத கவிஎனினும்
திருமுன்பு சாற்றுகிறேன்
மாறாத துயரகல
மாயவனே நீ வருவாய்
ஆறாத வடுமாற
ஆயனென நீவருவாய். .

பண்ணாறும் செந்தமிழால்
பரணியது பாடிடவே
வண்ணக் கரும்பட்டை
வாகையணி துப்பாக்கி
வன்புலிச் சின்னம்
வரைந்திட்ட தொப்பியுடன்
கண்மை நிறமீசை
கணம்பொருந்த வாருமையா. .

எண்டிசை நடுங்கவே
இன்றிங்கு வாருமே
தெண்டிரைச் சூழ்உலகில்
தென்னிலங்கைத் தேறவே
கண்ணெடுத்துப் பாருமே
கயவர்கள் சோரவே
பண்பாடி அழைக்கிறோம்
பாயஇது நல்லசமயம். .

யாரென்ன சொன்னாலும்
யான்உன்னை ஒருநாளும் ஐயுற்ற தில்லையப்பா
கார்த்திகைத் திங்களில்
கவியெடுத்துப் பாடுவேன் வல்லவன் நின்புகழை
காலெடுத்து வாருமே
கவலைகள் நிலம்புதைய. .

வாழ்க தண்டமிழர்
மீள்க தமிழர்நிலம்
ஆழ்க துயரெல்லாம்
சூழ்க நலமெல்லாம்
வாழ்க தமிழ்ப்பாவை
வெல்க தமிழ்ப்படை
வளர்க ஒற்றுமை
வருக எம்தலைவர்.

எழுதியவர்: சபரி நாதன்

#பிரபாகரன்60

https://m.facebook.com/photo.php?fbid=516968465073478&id=100002809860739&set=a.108935022543493.9865.100002809860739

No comments:

Post a Comment